அதிமுக பொதுக்குழு – ஓபிஎஸ் மேல்முறையீடு மனு வரும் 30-ம் தேதி விசாரணை : உச்சநீதிமன்றம்

Default Image

உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. 

கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து முதலில் ஓபிஎஸ் தரப்பு  உயர்நீதிமன்றத்தை நாடியது. அதில் ஒற்றை நீதிபதி தலைமை ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும், அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்