அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

Published by
பால முருகன்

Jayakumar : அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று தேனி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்தார்.

அப்போது அந்த பிரச்சாரத்தின் போது  ” மக்களவை தேர்தல் முடிந்து அதாவது ஜூன் 4ம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இருக்காது. தேர்தல் நடந்து முடிந்த பின் அதிமுக டி.டி.வி. தினகரன் வசம் ஆகிவிடும். இப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் தான் இருக்கிறார்கள். ” என அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலை கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” அண்ணாமலை அதீத கற்பனையில் பேசிக்கொண்டு இருக்கிறார். அரசியலில் அவர் அறியாப்பிள்ளை. இப்படி கற்பனையில் அவர் பேசிக்கொண்டு இருக்க நல்ல கதாசிரியராக செல்லலாம்.

எப்போதுமே மக்கள் தமிழகத்தில் மதவாதம், ஜாதி அரசியலுக்கு ஆதரவு கொடுத்தது இல்லை. டிடிவி தினகரன் மற்றும்  பாஜக இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் உள்ளது என்று எனக்கு இன்னும்வரை தெரியவில்லை. பாஜக ஒரு மதவாத கட்சி அந்த கட்சிக்கு கொள்கையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பைத் கொடுக்கவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

27 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

48 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

52 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

1 hour ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

2 hours ago