பெங்களூரில் இருந்து புறப்படும் போது காரில் அதிமுக கொடியுடன் வந்த சசிகலா, தமிழகம் எல்லைக்கு முன்பு அதிமுக கொடி அகற்றப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுர் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார்.
தமிழகம் வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்த அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில், வேறு ஒரு காருக்கு மாறினார் சசிகலா. ஆனால், அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்தடைந்தார். அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையில், சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்பட்டது. ஆனால், வேறு காருக்கு மாறிய சசிகலா கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்தடைந்தார். சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு சாலையெங்கும் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…