வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளதாகவும் விருதுநகர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பின் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய நல்லதம்பியிடம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை திருப்பி அளித்து விடுவதாக இருவரும் உறுதி அளித்தனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை ஐகோர்ட் கிளையில் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதால் முன் ஜாமீன் வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்பொழுதும் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…