அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருவதையடுத்து, போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக அதிமுக தொண்டர்கள் கூடினர். இவர்கள் போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை அகற்றியதை தொடர்ந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை எம்.எல்.ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விடுதியின் முன்பாக போலீசாருடன் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜாராம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டுள்ளார். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் அதிமுக தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…