முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் மனு!

Default Image

கொலை மிரட்டல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனு.

கொலை மிரட்டல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து நீலகிரி மாவட்ட மஞ்சூர் காவல்நிலையத்தினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தேயிலை தோட்டத்தை விற்க மறுத்ததால், கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

puthirasanthiran

எனக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றசாட்டியுள்ளார். கடந்த 2011- 2016 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழக உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் நீலகிரியைச் சேர்ந்த புத்திசந்திரன். அ.தி.மு.க-வின் நீலகிரி மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்