அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி நாளை ஒத்தி வைத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடைப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து,நீதிபதி காவல்துறை தரப்பில் ஜாமீன் மனு மீது விளக்கம் அளிக்க வரும் 24-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதன்படி,முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,மணிகண்டன் அவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்:”ஆதாரங்கள் இல்லாமலும், விசாரணையை முடிக்காமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது”,என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள காவல்துறையினர்,”வாட்ஸ்-அப் மிரட்டல்,போட்டோ அனுப்பியது பற்றிய ஆதாரம்,சாட்சி வாக்குமூலம் உள்ளிட்டவைகள் பெறப்பட்டு தான் மணிகண்டன் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும்,அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது”,என்று கூறினர்.
இதனையடுத்து,இருதரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதி,மணிகண்டன் ஜாமீன் மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…