அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பேர்ச்சுவார்தைக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் உள்ளிட்டவர்கள் வராத நிலையில், அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓட்டல் லீலா பேலசில் அதிமுகவின் வைத்திலிங்கம், கேபி முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் பேச்சுவார்த்தையில் தேமுதிகவின் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் பங்கேற்றுள்ளனர்.
பாமகவுக்கு இணையான தொகுதிகளை தேமுதிக கேட்கும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு வீச்சில் பரப்புரை செய்ய இயலாத சூழல் மற்றும் வாக்கு சதவீதம் சரிவால் தொகுதிகளை குறைத்து கொள்ள அதிமுக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக ராஜ்யசபா சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி என தகவல் கூறப்படுகிறது. கடந்த தேர்தல் கூட்டணியின் போது பாமகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. நாளை இறுதி எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…