நேற்று எனக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தவில்லை.! ஓபிஎஸ் கருத்து.!

Default Image

நானும், முதல்வர் ஸ்டாலினும் பேசியதை அவர்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டு விலகி விடுகிறோம். நிரூபிக்க தவறினால் அதேபோல அவர்கள் விலக தயாரா? என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தங்களுக்கு (அதிமுக) உரிமை பறிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிகக்காததற்கும் எதிர்த்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில், இபிஎஸ் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் உடன் ஓ.பன்னீர்செல்வம் பேசினார் என குற்றம் சாட்டினார்.

இது குறித்து  இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘ நேற்று நடைபெற்ற போராட்டம் எனக்கு எதிராக நடைபெற்றதாக நான் கருதவில்லை ‘ என்று குறிப்பிட்டார்.

மேலும், இபிஎஸ் கூறிய குற்றசாட்டு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘ இந்த குற்றச்சாட்டிற்கு நேற்றே எனது ஆதரவாளர்கள் பதிலளித்து விட்டார்கள். நானும், முதல்வர் ஸ்டாலினும் பேசியதை அவர்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டு விலகி விடுகிறோம். நிரூபிக்க தவறினால் அதேபோல அவர்கள் விலக தயாரா என சவால் விட்டு இருக்கிறர்கள்.’ என ஓபிஎஸ் பதில் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்