ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பாபு முருகவேல் புகார் மனு.
வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், 2ம் கட்ட வாக்குப் பதிவில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு மையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையங்களை மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 60.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…