சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை(காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) நடைபெறவுள்ளது.மேலும்,
வேட்பு மனு மீதான பரிசீலனை:
5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி
வேட்பு மனு திரும்பப் பெறுதல்:
6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.
தேர்தல் நாள்:
7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு:
8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்,தொடர்ந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…