#breaking: எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் – நாளை பிரதமரை சந்திப்பு..!

Published by
Edison

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி பயணம்:

இந்நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள்,கோவை சென்று அங்கிருந்து இரவு விமானம் மூலம் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,அவருடன் தங்கமணி,எஸ்பி வேலுமணி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.

பிதமரை சந்திப்பு:

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும்,இந்த சந்திப்பின்போது,தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் அவர் முறையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும்,அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாதிப்பார் எனவும் தகவல் வெளியானது.

வழக்கு:

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது,இதனால், திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில்,கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை ஆளுநரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுத்துள்ளார். இதற்கிடையில்,வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான்,அதிமுக தலைமை டெல்லி சென்றுள்ளது. ஏனெனில்,2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக -பாஜக கூட்டணி தற்போது வரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

3 hours ago
RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

4 hours ago
சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

7 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

7 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

8 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

8 hours ago