மதுரை: முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.அதில் முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும். இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்று கூறினார்.
மதுரையில் முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.இந்த மாநாட்டிற்கு வீர முத்தரையர் முன்னேற்றச் சங்க நிறுவனர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,முத்தரையர்கள் பெருமைக்குரியவர்கள்.
கலை, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள். மண்ணையும், மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்குகின்றனர்.நானும் ஒரு விவசாயி என்பதால், முத்தரையர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும்.முத்தரையர் சமுதாய மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு அரசு துணை நிற்கும் என்றார்.
இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு.அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடைய செய்யவேண்டும்.அவர்களுக்கு தேவையான கல்வி ,வீடு ,சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு எங்களுடைய அரசு செயலாற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், விஜயபாஸ்கர் ,செல்லூர் ராஜு,திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…