அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போட்டி இல்லாமல் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவசர கதியில் தேர்தல் நடத்துகின்றனர். பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுவதாகவும், தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை. இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களும் கேட்காமல் இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்கமாட்டேம். கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மூன்று வாரங்களில் பதிலளிக்க அதிமுக தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…