அதிமுக -பாஜக : கூட்டணியின் நிலை என்ன ? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

Default Image
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவிடம் பேசியுள்ளோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது.ஆனால் மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.இதன் பின்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணி தொடர்ந்தது.ஆனால் தற்போது  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதற்காக கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவிடம் பேசியுள்ளோம். இன்றைக்குள் முடிவு எடுக்கப்படும் .உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக நீதிமன்றத்தை அணுகியிருப்பது அச்சத்தின் அடிப்படையில் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்