அதிமுக துணை நிர்வாகிகள் நியமனம் – ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவிப்பு..!

Published by
Edison

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்,குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவதாக அறிவித்ததை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற  வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக துணை நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.அதன்படி,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் :

  • கொள்கை பரப்பு துணைச் செயலாளர் – பேராசிரியர் முனைவர் சா. கலைப்புளிதன், M.Com., M.Sc., M.A, M.L., M.Phil, Ph.D., (தலைமைக் கழகப் பேச்சாளர், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்)

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்- இணைச் செயலாளர்கள் :

  • திரு. R.P. மருதராஜா, M.Sc., Ex. M.P., அவர்கள் (பெரம்பலூர் மாவட்டம்)
  • டாக்டர் S. முத்தையா, Ex. M.L.A., அவர்கள் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, ராமநாதபுரம் மாவட்டம்)
  • திரு. ராயபுரம் மனோ அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை மாவட்டம்)
  • திரு. M.C. தாமோதரன், Ex. M.P., அவர்கள்(முன்னாள் அமைச்சர், கடலூர் மாவட்டம்)

கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்

  • இணைச் செயலாளர் – பொன். ராஜா, Ex. M.L.A., அவர்கள் (பொள்ளேரி தொகுதி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம்)
  • துணைச் செயலாளர் – P. சந்தானகிருஷ்ணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்)

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி:

இணைச் செயலாளர் -திரு.E. லட்சுமிநாராயணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை வடக்கு மாவட்டம்)

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு :

திரு. M.A. சேவியர் அவர்கள் (திருவள்ளுவர் நகர், கொடுங்கையூர்,பெரம்பூர் பகுதி, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே,கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று தெரிவித்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago