புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்த அதிமுக..!

Published by
murugan

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலைதொடர்ந்து அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், அதிமுக சார்பில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரியில்‌ உள்ள 5 நகராட்சிகள்‌ மற்றும்‌ 10 கொம்யூன்‌ பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ வருகின்ற அக்டோபர் 21,25 மற்றும் 28 ஆகிய தேதிகளில்‌ மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காகவும்‌,

கூட்டணிக்‌ கட்சிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தி, கழகம்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகள்‌ போட்டியிடும்‌ இடங்களை தேர்வு செய்வதற்காகவும்‌, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகளின்‌ வேட்பாளர்கள்‌ வெற்றிபெறும்‌ வகையில்‌ தேர்தல்‌ பணிகளை மேற்கொள்வதற்காகவும்‌, புதுச்சேரி மாநில தேர்தல்‌ பணிக்குழுப்‌ பொறுப்பாளர்கள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், புதுச்சேரி மாநில (கிழக்கு) கழகச்‌ செயலாளர்‌ அன்பழகன், புதுச்சேரி மாநில (மேற்கு) கழகச்‌ செயலாளர்‌ ஓம்சக்தி சேகர்‌, காரைக்கால்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ v.ஓமலிங்கம்‌

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்‌ பொறுப்பாளர்களோடு, புதுச்சேரி மாநிலம்‌ (கிழக்கு, புதுச்சேரி மாநிலம்‌ மேற்கு) மற்றும்‌ காரைக்கால்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ இணைந்து, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றிடும்‌ வகையில்‌, சிறந்த முறையில்‌ தேர்தல்‌ பணிகளை ஆற்றிட வேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

12 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

12 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

12 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

12 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

12 hours ago