இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக , பாஜக கட்சி தலைமைகள் தான் முடிவு செய்யும். – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது முதல் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பிரதான கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த தேர்தல் குறித்து நாளை பாஜக முக்கிய நிர்வாகிகள் கடலூரில் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பாஜக போட்டியிடுகிறதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதா என அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு முன்னரே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் குழுவை நியமித்தார். இதனால் பாஜக போட்டியிடுமோ என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது. இது குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சேத்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக , பாஜக கட்சி தலைமைகள் தான் முடிவு செய்யும். பாஜக தேர்தல் குழுவை அமைத்தது. தேர்தல் பணிக்காக மட்டுமே.’ என விளக்கம் அளித்தார்.
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…