ஹைட்ரோ கார்பன் போராட்டம் எதிரொலி – 430 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!

Default Image

விளை நிலங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 430 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்திட மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதனால், விளை நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் மற்றும் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,அனுமதி இல்லாமல் போராட்ட்டம் நடத்தியதாக கூறி 430 விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்