சென்னை புதிய விமான நிலையம்.! 13 கிராமங்களின் 80 நாள் போராட்டம் வாபஸ்.!

Published by
மணிகண்டன்

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட பிறகு 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. 

சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்தை அடுத்து, இரண்டாவதாக சென்னை அருகே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராமத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதற்கான திட்ட வரைவுகளும் தயார் ஆனது.

ஆனால் இதனை எதிர்த்து, பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் ஒன்றைந்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதாவது விமான நிலைய வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள 4700 ஏக்கர் நிலத்தில் 3000 முதல் 3500 ஏக்கர் நிலமானது நஞ்சை , புஞ்சை எனும் விவசாய நிலமாகும். மீதமுள்ள ஏக்கர் நிலம் மட்டுமே தரிசு நிலம் எனவும்,

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் அங்குள்ள 1500 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நிலம், வீடு பறிபோகும் சூழல் இருகிறது என விவசாய கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

80 நாட்களை கடந்த இந்த போராட்டத்தை அடுத்து,  அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி, அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், மீண்டும் விமான நிலைய வரைவு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டு அதனை அரசுக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்த நிலையில், விவசாய கூட்டமைப்பினர் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

25 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

52 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago