உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் -திருநாவுக்கரசர் 

Default Image

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் என்று காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்  தெரிவித்துள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான்.  தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் .அதுவரை கூட்டணி பற்றி பேசவோ விவாதம் செய்யவோ அவசியமில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்  தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்