ரஜினிகாந்துக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் – தமிழிசை சவுந்தரராஜன்

Published by
பாலா கலியமூர்த்தி

எனக்கு சுருட்டை முடி தான். ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன். என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என ஜாலியாக தெரிவித்துள்ளார். நான் கல்லூரில் படிக்கும்போது உடைக்கே ரசிகர்கள் இருப்பார்கள்.

அரசியல் கட்சி தலைவர் ஆனதும், அதில் கவனம் செலுத்த முடியவில்லை. கருப்பாக யாருமே இல்லையா என்று கூறுவேன். எப்பப்பார்த்தாலும் என்னையே விமர்சனம் செய்து வருகிறார்கள் என சொல்லிக்கொள்வேன். ஆனால், இதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கமாட்டேன். என்னை குள்ளம் என்று சொன்னார்கள், குணத்திலும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் என்றுமே நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறேன்.

எனக்கு சுருட்டை முடி தான். ஆனால், என்னுடைய சொந்த பணத்தில் தான் பொது மக்களுக்கு செலவு செய்திருக்கிறேன் தவிர, யார் பணத்தையும் சுருட்டியது அல்ல. நான் கருப்பு தான். ஆனால், என் கைகளில் கருப்பு பணம் இல்லை. இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவமானங்கள், விமர்சனங்கள் வரும்போது தான், இதைத்தாண்டி நாம் உயர வேண்டும் என்பதுதான் விதி. வெறி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று உற்சாகமாகவும் மேடையில் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…

3 minutes ago

இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார் தொழில்நுட்பம்! Vivo V50 போனின் சிறப்பு அம்சம்!

டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…

49 minutes ago

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…

2 hours ago

‘பேட்டிங் மட்டும் போதாது தம்பி”…அபிஷேக் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங்  கொடுத்த அட்வைஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…

3 hours ago

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…

3 hours ago