பாஜகவில் இவர் இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது – காயத்ரி ரகுராம்

Default Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு.

பாஜகவில் அண்ணாமலையும், மதனும் இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுதொடர்பான காயத்ரி ரகுராம் ட்விட்டர் பதிவில், இந்த பிரச்னை குறித்து அண்ணாமலையிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றசாட்டியுள்ளார்.

எனவே காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் பிரச்னை குறித்து தேசிய தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலிறுத்தியுள்ளார். மேலும், பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன். இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் கொண்டு வருவது யார்?,

உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும், ஆனால் ஏன் எங்களை தரம் தாழ்ந்து அடிக்க வேண்டும் மற்றும் எங்களை பற்றி பேச வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களை திமுக ஸ்லீப்பர்செல் என்று அழைப்பது ஒரு உத்தி. மீண்டும், கட்சியில் பெண்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கிறேன். பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அவருக்கு மற்ற கட்சி உறுப்பினர்களை அணுக முடியாது என்பது பொய் எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்