டெல்லி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, நேற்று இரவு ஆளுனர் ரவி தமிழகம் வந்தடைந்தார்.
தமிழகத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில் ஆளுநர் ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசித்தார்.
கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ரவி. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து ஆலோசித்தார். இந்த ஒரு வார பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு 8 மணிக்கு விமானம் மூலம் தமிழகம் திரும்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஏற்கனவே, செந்தில் பாலாஜியை தமிழக அரசு அமைச்சரவையில் நீட்டிக்கப்பட்ட விவகாரம், அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்குகள் விசாரிக்காதது குறித்து தமிழக அரசு கடிதம் அனுப்பிய விவகாரம் என பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீண்டு கொண்டு இருக்கிறது.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…