சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின் பெருமழை.. கடந்த 24 மணிநேரத்தில் 34 செ.மீ..

Published by
பாலா கலியமூர்த்தி

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முதல் விடிவிடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பல்வேறு பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னையே மலையில் தத்தளித்து வருகிறது.

இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது.  மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புயல் எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாமல் அதி கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கனமழை..! தரையில் இறங்கிய அடுக்குமாடி கட்டடம்..!

இதில் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்கள் எல்லாம் தண்ணீர் அடித்து செல்லும் காட்சியும் வெளியாகியுள்ளது.

கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது, தவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 34 செமீ மழை பதிவாகியுள்ளது. 1976ம் ஆண்டு ஒரே நாளில் 47 செ.மீ மழை பதிவாகி இருந்த நிலையில், தற்போது இன்று காலை வரை அதாவது கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 34 மழை பதிவாகியுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ல் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது 33 செ.மீ மழை பெய்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகமாக 34 செ.மீ மழை பொழிந்துள்ளது. மேலும், சென்னையில் இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் என படிப்படியாக இரவுக்கு பிறகு மலை குறையும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

2 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

3 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

4 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

6 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

17 hours ago