மறைமுகத் தேர்தலுக்கு ஆலோசனையா ? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்

Default Image

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மீண்டும் மறைமுக தேர்தல் முறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.தற்போது மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம்.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்