கால்நடைகள் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – கால்நடை பராமரிப்பு துறையின் முக்கிய அறிவுரைகள்!

Published by
Edison

கால்நடைகளில் ஏற்படும் உடல் தாழ்வெப்பநிலை குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடைகளில் உடல் தாழ்வெப்பநிலை ஏற்படுவதற்கு, தேங்கி இருக்கும் தண்ணீரில் கால்நடைகள் அதிக நேரம் இருப்பது உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் என்றும்,அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்கான அறிவுரைகளையும் தமிழக கால்நடை பராமரிப்பு துறை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக,கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“கால்நடைகளில் சாதாரன உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க (101 102.5°F) அளவு (96*F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதாலம்.

பொதுவாக, புதிதாக பிறந்த குட்டிகளும் இளங்கன்றுகளும் அதிகமாக உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு சில நேரங்களில் இறக்கவும் நேரிடுகிறது.

காரணங்கள்:

  • தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் இருப்பது.
  • குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் ஈரமான தரை.
  • பாதகமான சீதோஷண நிலையினால் போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காதது.
  • ஈரமான மண் உடன் கூடிய இருப்பிடம் சரிவர நீர் வடியாத கொட்டகை.

உடல் தாழ்வெப்பநிலையின் போது தோன்றும் அறிகுறிகள்:

  • கால்நடைகள் சோர்வாகவும் தீவனம் எடுக்காமலும் நிற்க முடியாமல் படுத்து இருக்கும்.
  • மூட்டு பகுதிகள் குளிர்ந்து காணப்படும்.
  • உடல் நடுங்கும்.
  • அதிக இதய துடிப்பும் மூச்சிரைப்பும் காணப்படும்.
  • இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்

உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்:

  • கால்நடைகள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் இருந்தால், உடனடியாக அவற்றை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும்.
  • காய்ந்த துணி, சாக்கு அல்லது வைகோலை தரையில் பரப்பி அதன் மேல் படுக்க வைக்க வேண்டும்.
  • கொட்டகையில் தண்ணீர் தேங்கி இல்லாமலும் குளிர்ந்த காற்று வீசாதவாறும் பார்துக்கொள்ள வேண்டும்.
  • குடிப்பதற்கு சற்று சூடான தண்ணீரும் உரிய தீவனமும் கொடுக்க வேண்டும்.
  • உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சற்று சூடேற்றப்பட்ட குளுக்கோஸ் திரவத்தை இரத்த குழாய் வழியாக உடலுக்குள் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

28 minutes ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

1 hour ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

5 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

6 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

7 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

8 hours ago