அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று(மார்ச்.15) தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி கட்சியின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களும், மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொருந்திய கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், “அ.தி.மு.கவின் கொடியின் அமைப்பைப் போன்றே தினகரனின் கொடியின் அமைப்பும் உள்ளது. எனவே தினகரன் கட்சியின் கொடியை உபயோகிக்க தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…