அதிமுக டிடிவி.தினகரன் துவக்கியுள்ள புதிய அமைப்பின் கொடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ஜெயலலிதா படத்துடன் கூடிய டிடிவி அமைப்பின் கொடி, அதிமுக கொடியை போல் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏ (MLA)-வான டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பையும், அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் வரிசையாகவும் அதன் நடுவில் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது. அதிமுக கொடியில் அண்ணாவின் படம் இருப்பது போல, டிடிவி தினகரனின் கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. பின்னர் மேடையில் பேசிய அவர் இயக்கம், கொடி, சின்னம் உள்ளிட்டவை இல்லாமல் நாம் இவ்வளவு நாள் தவித்து வந்ததோம். இனி நிலைமை அப்படி இல்லை.தனி இயக்கமாகச் செயல்படப்போகிறோம். விரைவில் அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்றார்.
இந்நிலையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட டிடிவி தினகரன் அமைப்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிக்கு எதிராக, அதிமுக சார்பில் தடை கேட்டு இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதில் தினகரன் அமைப்பின் கொடி அதிமுக கொடியை போலேவ கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் அடங்கி இருப்பதாகவும், கொடியின் நிறங்கள் இரண்டிலுமே ஒரே மாதிரி இருப்பதால் அது தொண்டர்களை குழப்பமடையச் செய்யும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமமுக அமைப்பின் கொடியை நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…