[Representative Image]
திருநெல்வேலி பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டை பகுதி மயிலாபுரத்தை சேர்ந்தவர் 52 வயதான பிச்சை ராஜு. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை பஞ்சாயத்து துணை தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ள இவர் பேட்டை எம்ஜிஆர் நகரில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு மதுபான பார் நேரம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் வீரபாகு நகர் அருகே சென்று கொண்டிருக்கையில், பிச்சை ராஜூவை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கூறிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போரடிய பிச்சை ராஜூவை பார்த்தும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு போன் செய்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பிச்சை ராஜு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், பேட்டை பகுதி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சம்பவ இடத்திற்கு நெல்லை காவல்துறை துணை ஆணையர் அனிதா நேரில் பார்வையிட்டார். தற்போது இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…