தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. அதர்குள் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள், தங்கள், கட்சி உறுப்பினர்களை பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர்.
இதில் அதிமுக, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்த சட்டம் இயற்றியுள்ளதால், விருப்பமனு கட்டணம் செலுத்தியவர்கள் தாங்கள் அளித்த கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 25.11.2019 தேதியில் இருந்து 29.11.2019 தேதிக்குள் விருப்ப மனு கட்டணம் செலுத்திய அசல் ரசீது கொண்டு வந்து பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என அறிக்கையில் அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மறைமுக தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 22.11.2019 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் உரிய அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…