பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கு… கொரோனா பீதியால் 6 மாத தலைமறைவுக்கு பின் அதிமுக பிரமுகர் இன்று சரண்…

Published by
Kaliraj

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வணக்கம் சோமு. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  பொருளாளராக இருந்த இவர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையிலும் ஒருதலைக்காதலின் விளைவாக  திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையை  கடந்த 2019  செப்டம்பர் மாதம் 30 தேதி இவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் காரில் கடத்தினார். இந்த  கடத்தல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்மிகு காவல்துறையினர் அந்த ஆம்புலன்ஸ் காரை தேடிச் சென்றனர். இதை அறிந்த அந்த கும்பல்  திருச்சி – திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்த உதவி பேராசிரியையை சாலையோரம் இறக்கி விட்டு விட்டு அந்த  கடத்தல் கும்பல் தப்பித்தது. இந்த கடத்தல் வழக்கை விசாரித்த காவல்துறையினர்   வணக்கம் சோமுவின் கூட்டாளிகள் தஞ்சையை சேர்ந்த ஜெயபால், அலெக்ஸ், ஞானபிரகாஷம், விக்னேஸ்வரன், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு மட்டும் காவலர்கள் பிடியில் சிக்காமல்  தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு   தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை. மேலும் அவரை, அதிமுகவின்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. அவரது ஜாமீன்  மனுகளும் நீதிமன்றத்தால்  தள்ளுபடியான நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார்.  இவரை காவல்துறையினர்  திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்த காரணத்தால்  இவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Published by
Kaliraj

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

38 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

4 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago