5 பேர் கொண்ட அதிரடி குழு அமைப்பு..!அதிமுக தலைமை அறிவிப்பு..!!

Default Image

அதிமுக தொண்டர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைத்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.மேலும் இந்த குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிமுக அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன் மற்றும் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பேராசிரியர் பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ராஜன் விடுவிக்கப்பட்டு  அதிமுக அறிவித்துள்ளது.ஆனால் திருத்தியமைக்கப்பட்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக சேவூர் ராமச்சந்திரன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து அசோக் குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோவிந்தராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக சைலேஷ் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளராக அசோக் குமார்,மேற்கு மாவட்ட செயலாளராக பாலகிருஷ்ணா ரெட்டி நியமனமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்