அரசு பள்ளிகளில் துவங்கிய மாணவர் சேர்க்கை.! கொரோனாவை காரணம் காட்டி பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள்.!

Default Image

அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய போதிலும் கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வராமல் இருப்பதை அடுத்து அவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த 17ஆம் தேதி முதல் 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நடைப்பெற்று வருகிறது . அரசு கூறியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் சென்று அரசு பள்ளிகளின் நன்மைகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களிடம் கூறி குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விட முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அவர் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சிலர் மாணவர் சேர்க்கை ஆரம்பித்த பின்னரும் பள்ளிகளுக்கு வரவில்லை என்று தெரிய வந்ததை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

அதில் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தினமும் வருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வராத ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்