தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கை தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாலோசித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது போன்று நடக்கக்கூடாது என கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கையை தொடங்க வேண்டும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் மாநில பாடத்திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ யில் பயின்ற +2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கம் போல் இருக்கும் சேர்க்கை முறையே இப்போதும் தொடரும்.
பெருந்தொற்று காலம் காரணமாக கல்லூரி மாணவர்களின் சேர்க்கை தாமதமாக தொடங்கப்படுவதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து கல்லூரிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்கான சலுகைகள் தொடரும் எனவும், கல்லூரிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ளதாகவும், விரைவில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…