ADMK Case MHC [File Image]
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரது மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நாட்கள் நடைபெற்ற வாதங்கள் ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த நிலையில், பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 2022-ஆம் ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே, காலதாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என இபிஎஸ் தரப்பின் எழுத்துப்பூர்வமான வாதம் வைக்கப்பட்டது. இதுபோன்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தடுக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…