ADMK Chief Secretary Edappadi Palanisamy [File Image]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மழை காரணமாக அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – ஈபிஎஸ்
இந்த நிலையில் தற்போது, தஞ்சையில் நவம்பர் 16-ல் அதிமுக நடத்தவிருந்த பொதுக்கூட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4-ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம், கனமழையால் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த முறை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…