ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Default Image

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம்  23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது  செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மே 31-ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இதனால் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றம் வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என்று  கேள்வி எழுப்பியது. மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று கூறி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 19-க்கு ஒத்திவைத்து நீதிமன்றம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்