அத்திவரதர் :ஒரே நாளில்  2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்!

Default Image

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவத்தின் 36 வது நாளான இன்று அத்திவரதர் ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில், மல்லிகை, தாமரை, செண்பகப்பூ மலர் அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து  வருகிறார்.மேலும் கோவிலில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு பால் , பிஸ்கட் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கு நள்ளிரவு வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கடந்த 35 நாட்களில் 55 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்  தரிசனம் செய்து உள்ளனர். நேற்று விடுமுறை என்பதால்  2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்  தரிசனம் செய்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்