தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்று முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில்,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும்,மேலும் கொரோனா 3 வது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…