திரையரங்கில் கூடுதல் கட்டணம்…நீதிமன்றம் எச்சரிக்கை…!!

Default Image

கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று திரையரங்கை ஆய்வு செய்ய செல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையியில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.அதில் , விஜய் நடித்த சர்க்கார் படத்தை கூடுதல் கட்டணத்தில் வெளியீட்ட்ட திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டத்தை அதிகாரிகள் அமுல் படுத்தவில்லை என்று கூறி அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது , நீதிபதிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று ஆய்வு மேற்கொள்ள செல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் மேலும் விஸ்வாசம் , பேட்ட படத்தின் வசூல் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்