#BREAKING: கூடுதல் கொரோனா தடுப்பூசி.., பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , கொரோனா தொற்று கடந்த 7 நாட்களில் விரைவாக அதிகரித்து இரு மடங்காகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61593 ஆகவும், உயிரிழப்பு 13 ஆயிரத்துக்கு அதிகமாகவும் உள்ளது. இந்நிலையில் தடுப்புசி பற்றாக்குறையால் தமிழகமே தவித்து வருகிறது.
தமிழக அரசுக்கு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும். மருந்து கொள்முதலில் மாநிலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநிலங்களை தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு விரைவில் எடுக்க வேண்டும். பிரதமரே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் திமுக எம்பிக்கள் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025