முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகை.! தன்னை ஏமாற்றியதாக புகார்.!

Published by
மணிகண்டன்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார்.நான் அவரை பார்த்துவிட்டு தான் செல்வேன் என நடிகை சாந்தினி கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருக்கிறார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்து இருந்தார் . அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒன்றாக வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் பெயரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்து நடிகை சாந்தினி கொடுத்த வழக்கு சில மாதங்களுக்கு முன்னர் வாபஸ் பெறப்பட்டது .

இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகை சாந்தினி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளார். பின்னர் அந்த இடத்தி பரபரப்பு நிலவியதுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் இது குறித்து நடிகை சாந்தினி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ 4 மாதங்களுக்கு முன்னர் அவர் (முன்னாள் அமைச்சர் மணிகண்டன்) மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன். அவர் என்னிடம், ‘ என்னால் உன் வாழ்க்கை வீணாய் போனது. நான் என்னால் ஆனதை உனக்கு செய்கிறேன்.’ என வாக்குறுதி கொடுத்தார்.’ என்று ஷாந்தினி கூறினார் .

மேலும், ‘ வாபஸ் பெற்றதில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று நான் மதுரையில் அவர் வீட்டருகே பார்த்துவிட்டேன். என்னை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் தான் ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தேன். ‘ என கூறினார்.

மேலும் பேசுகையில் , ‘ என்னை ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.’ என குற்றம் சாட்டி, இறுதியில், ‘ நான் அவரை பார்த்துவிட்டு தான் போவேன். என்னிடம் என்ன வென்று தெளிவாக பதில் சொல்ல வேண்டும் அதுவரையில் நான் செல்வதாயில்லை.’ என செய்தியாளர்களிடம் தெரிவித்த்தார் நடிகை சாந்தினி.

இந்த சம்பவத்தை அடுத்து சாந்தினியை ரமந்தபுரம் பஜார் காவல்நிலைய அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

32 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

34 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago