அரசியலில் நடிகை குஷ்பூ ஒரு சாதாரண நபர் அல்ல! பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!

Default Image

குஷ்பூ அரசியலில் சாதாரண ஆட்களை போல இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்க கூடியவர்.

நடிகை குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் தான்னை இணைத்து கொண்டார். இவரது இந்த செயலுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இதுகுறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், குஷ்பூ அரசியலில் சாதாரண ஆட்களை போல இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்க கூடியவர். இவர் 2013-2014ம் ஆண்டிலேயே பாஜக-வில் இணைய வேண்டியவர் என தெரிவித்துள்ளார். மேலும், இவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்து பேசுகையில், பல்கலைக்கழகத்தை மேம்படுத்த துணைவேந்தர்கள் இதுபோன்று செய்வது கடமை, அவர் செய்ததில் தவறில்லை.’ என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்