ஐந்து வருடம் தன்னுடன் வாழ்ந்து விட்டு ஏமாற்றப் பார்க்கிறார் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்!

Published by
Rebekal

தன்னுடன் 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே வாழ்ந்து விட்டு தற்போது திருமணம் குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் தான் நாடோடிகள். இந்த படத்தில் பணக்கார வீட்டு காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகை தான் சாந்தினி தேவா. இவர் மேலும் சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது நடிகை சாந்தினி தேவா முன்னாள் அதிமுக அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவுமான மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார். மணிகண்டன் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அளித்துள்ள புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் தன்னை ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.

மேலும், பலமுறை தன் கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும், திருமணம் குறித்து பேசினால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டி வருவதாகவும் கூறியுள்ள நடிகை சாந்தினி மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago