இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் ஆக முடியும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துவக்க விழாவும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தின் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமாகிய கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியை ஏற்றிய பிறகு மேடையில் மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் ஜெயலலிதா எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக முடியாது எனவும், ரஜினி போன்றவர்கள் முதல்வராக முயற்சிப்பது தங்களது படத்தை ஓட வைக்க தான், 50 கோடி ரூபாய் சம்பாதித்த பிறகு அவர்கள் ஆஸ்திரேலியா சென்று விடுவார்கள் எனவும் இனி தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக முடியாது. விவசாயிகள் மட்டுமே முதல்வராக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…