இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா…!

Default Image

நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில்  பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை வெளிக்காட்டும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு படக்குழு திரையிட்டு காட்டியுள்ளனர். முதல்வர் அவர்களும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில்  பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்