முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சூரி 10.25 லட்சம் நிவாரண நிதியை உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவல் தினமும் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு நிதி அளிக்க வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் ,அரசியல் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் கூட ஆன்லைன் மூலமாகவும் நேரில் சந்தித்தும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர். திரையுலகில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விக்ரம், இயக்குனர் முருகதாஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களால் முடிந்த அளவு நிவாரண நிதிக்காக பணத்தை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் பரோட்டா சூரி அவர்கள் 10 லட்சத்துக்கான காசோலை மற்றும் தன் மகன், மகளுடைய சார்பில் 25 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…