கொரோனா மருந்தை கண்டுபிடித்தது மோடி.? பிரச்சாரத்தில் குதித்த செந்தில்..!

Published by
மணிகண்டன்

PM Modi : கொரோனாவுக்கு மருந்து பிரதமர் மோடி பொறுப்பில் இருந்ததால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அரசியல் தலைவர்கள் , வேட்பாளர்கள் மட்டுமல்லாது நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் தற்போது தான் தமிழக தேர்தல் களம் என்பது களைகட்ட ஆரம்பித்துள்ளது.

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பாஜக நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். இவர் முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்து இருந்தார்.

இவர் பேசுகையில், நான் முதலில் அதிமுகவில் இருதேன். அதிமுகவுக்கு சேவல் சின்னம் கொடுக்கப்பட்டது முதல் நான் இருந்தேன். அப்போது எடப்பாடி பழனிச்சாமி கிடையாது. 1989க்கு பிறகு தான் எனக்கு பின்னால் வரிசையில் வருகிறார். அப்போது இருந்தே இருக்கும் அடிமட்ட தொண்டனாகிய எனக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தான் இங்கு (பாஜக) வந்துள்ளேன்.

பிரதமர் மோடி மட்டும் இல்லை என்றால் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. கொரோனா தடுப்பூசியெல்லாம் மோடி ஐயா தவிர உலகில் வேறு யாராலும் கண்டுபிடித்து இருக்க முடியாது என பிரதமர் மோடி ஆட்சியில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊசி தான் அமெரிக்கா வரையில் ஏற்றுமதியானது என்றும் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால்  இங்குள்ள மக்கள் அதிகம் பேர் உயிரிழந்து இருப்பர் . கச்சத்தீவு மோடி ஐயா இருந்து இருந்தால் இலங்கைக்கு போயிருக்காது. இப்போ கூட அவர் நினைச்சா கச்சத்தீவு இங்க வந்துரும் என கூறி தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் நடிகர் செந்தில்.

மேலும், தமிழகத்தில் பழனி முருகன், நீலகிரியில் எல்.முருகன் (பாஜக வேட்பாளர்), இங்கு பிரச்சாரம் செய்ய வந்து இருப்பது செந்தில் முருகன் என ரைமிங்கில் பேசியும் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார் நடிகர் செந்தில்.

Recent Posts

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…

12 hours ago

கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப்…

13 hours ago

தீர்ந்தது சிக்கல்..வீர தீர சூரன் படம் வெளியிட அனுமதி கொடுத்த டெல்லி நீதிமன்றம்!

சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…

14 hours ago

பதவி விலகனும் இல்லைனா இபிஎஸ் அவமரியாதையை சந்திப்பார்! ஓபிஎஸ் பதிலடி!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…

15 hours ago

ஏன் முடியாது? கண்டிப்பாக 300 அடிப்போம்…ஹைதராபாத் பயிற்சியாளர் அதிரடி பேச்சு!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…

16 hours ago

“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா முஸ்லீம்களை வஞ்சிக்கிறது!” பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…

17 hours ago