சரத்குமார் : நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார். இதனையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே தேர்தலின் போது தீவிரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகளும் கடந்த சனிக்கிழமை வெளியானது.
இந்த நிலையில், தேர்ததலில் தன்னுடைய மனைவி ராதிகா வெற்றிபெறவேண்டும் என்று சரத்குமார் கோவிலில் அங்கப் பிரதிஷ்டம் செய்துகொண்டார். இன்று காலை விருதுநகரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் வருகை தந்தனர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குளை பெற்று வெற்றிபெற வேண்டியும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டியும் அங்கபிரதட்சணம் செய்துகொண்டார். அது மட்டுமின்றி, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்வில் மனைவி ராதிகா மற்றும் பாஜகவினரும் கலந்துகொண்டார்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…